Tuesday, June 23, 2009

மீண்டும் ஐ.தே.கட்சியினுள் பிளவா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிற்கப்போவதில்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான லக்ஸ்மன கிரியல்ல கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாடும் பொருட்டு ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவ் ஒன்றுகூடலுக்கு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இந்த ஒன்றுகூடலில் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் பேசப்படும் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com