Wednesday, April 29, 2009

பிரித்தானியத் தூதரகம் முன்பாக தேரர் ஒருவர் உண்ணாவிரதம். 50 கோடி ஸ்ரேலிங் பவுண் நஷ்டஈடு வேண்டுமாம்.


இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த ஒமல்பே சோபித தேரர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கைக்கான பிரித்தானி உயரிஸ்தானிகர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார்.

அத்துடன் பிரித்தானியா இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கைக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களுக்காக 50 கோடி ஸ்ரேலிங் பவுண் நஸ்டஈடு கோரி ஜாதிக ஹெல உறுமய பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட க்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com