Wednesday, April 29, 2009

பன்றிக் காய்ச்சல் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine influenza) -கிழக்கான் ஆதம்-



“Thou shall not kill. Thou shall not commit adultery. Don't eat pork. I'm sorry, what was that last one?? Don't eat pork. God has spoken. Is that the word of God or is that pigs trying to outsmart everybody?”

-Jon Stewart American Actor and Comedian(1962)-

இன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் பன்றிகளில் இருந்து தோன்றி இன்று மனிதர்களின் உடலை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான பன்றிப் பன்னைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப் பட்டுவருகின்றன.

திடீரேன தோன்றி படுவேகத்தில் பரவும் இத்தகைய வைரசுகள் பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப் பெயர் பெறுகிறது. பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் எனவும் பெயர்கள் உண்டு எனவே ஸ்வைன் ப்ளூ (Swine flu) என ஆங்கிலத்தில் கூறப்படுவதால் பன்றிக் காய்ச்சல் என தமிழில் கூறப்படுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த காய்ச்சலைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸாகும் (Swine fluenza virus- SIV) பன்றிகளுக்குள் புகுந்துவிட்டால் அதன் சுவாசப்பாதையில் பயணிப்பதனூடாக சுவாசத்தை மட்டுப்படுத்தி பன்றிகளை கொன்றுவிடும். இந்த வைரஸில் பல வகைகள் (Strains) விஞ்ஞானிகளால் இனம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தன்மைகள் தற்போது கண்டரியப்பட்டுள்ளன ஆர்.என்.ஏ.(R.N.A) வை அடிப்படையாகக் கொண்ட இந்த வைரசுகளின் ப்ளெஸ் பொயின்ட் அவை தங்கள் உருவை (Mutate) மாற்றிக்கொள்ளக் கூடியது. ஆகவே மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும்போது மனிதனின் உடலிலுள்ள தற்காப்பு முறைமையை (Immune System) இது வென்றுவிடுவதால் மனிதன் பாரதூரமாக இதனால் பாதிக்கப்பட்டு இறந்துவிடும் அபாயமும் உண்டு.

அதுமட்டுமல்லாமல் அது மனிதனுக்குள் புகுந்துவிட்டால் மனித உடலில் பல்கிப்பெருகி மனித சூவாசத்தினூடாக மற்றவரையும் தொற்றிக்கொள்ளக் கூடியது இந்த வைரஸ் இதற்கு H1N1 எனப் பெயரிட்டுள்ளனர். ஆகவே ஐரோப்பிய அமெரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் வாழும் நமது மக்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பன்னிரென்டுபேர் அமெரிக்காவில் 2005 ம் ஆண்டு இனங்காணப்பட்டனர். என்றாலும் இந்நோயின் தன்மையினை கண்டறிந்து இது பன்றிகளிலிருந்து பரவியிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தடுப்பு மருந்து பன்றிகளுக்கு ஏற்றப்பட்டபோது அமெரிக்காவில் முற்றாக இது தடுக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தனர்.

இதுபோன்ற காய்ச்சல் (flu) வகை உலக சரித்திரத்தில் பலமுறை கண்டறியப்பட்டுள்ளது. 1957ம் ஆண்டு (Asian Flu) ஆசியக் காய்ச்சல் என்ற ஒன்று நாற்பதைந்து மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் எழுபதுனாயிரம் பேர்வரை இறந்து போனார்கள். அதன் பதினொரு வருங்களின் பின்னர் 1968 ஆண்டு தொடக்கம் 1969 ம் ஆண்டு காலப்பகுதியில் ஹோங்கோங் காய்ச்சல் (HongKong flu) ஐம்பது மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் முற்பத்தி மூவாயிரம்பேர் இறந்தார்கள். 1976ம் ஆண்டு அமெரிக்க படைவீரர்கள் ஐநூறுபேர் பன்றிக் காய்ச்சலால் (Swine flu) சில வாரங்கள் பீடிக்கப்பட்டார்கள் என்றாலும் சில மாதங்களின் பின்னால் இந்த நோய் மாயமாக மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதுடன் இந்நோய் மீண்டும் தொன்றுவதற்கு எந்த அறிகுரியையும் காணமுடியவில்லை என்று கூறியிருந்தனர்.

தற்போது ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய தேசங்களுடன் அவுஸ்ரேலியாவையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலானது ஸ்பானிஸ் ப்ளூ (Spanish flu) எனப்படும் ஸ்பானியக் காய்ச்சலிலிருந்து பன்றிக் காய்ச்சலாக மாற்றமடைந்திருக்கலாமென நம்பப்படுகிறது. என்றாலும் உலகம் முழுவதும் பல இலட்ச்சம் மக்களை இந்தக் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் அபாயமிருப்பதால் அனைவரும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த எஸ்.ஐ.வி.(SIV) வைரஸ் வகை இரண்டு பிரவுகளாக காணப்படுகிறது இன்ப்ளூயென்ஸா சி (Influenzavirus C) அல்லது அதன் மற்றொரு உபபிரிவான இன்ப்ளூயென்ஸா ஏ (Influenzavirus A) என்பனவாகும் அவை.

இந்த வைரஸின் இன்ப்ளூயென்ஸா ஏயின் (Influenza virus A) உப கூறுகளான (H1N1, H3N2, and H1N2) இவை உலகம் முழுவதும் பன்றிகளில் கண்டறியப்பட்டிருந்தது. 1998ம் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியில் அமெரிக்காவிலுள்ள பன்றிகளில் H1N1 காணப்பட்டது என்றாலும் 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதகாலப்பகுதியில் அமெரிக்கப் பன்றிகளில் H3N2 கண்டறியப்பட்டிருந்த்து. என்றாலும் இரண்டாயிரத்து நாலாமாண்டு H3N2 காணப்பட்ட அமெரிக்கப் பன்றிகளிலும் துருக்கிய பன்றிப் பண்னைகளிலும் இந்தவகை வைரசுகளின் கூறுகள் மனிதனில் (HA, NA, and PB1) பன்றியில் (NS, NP, and M) பறவைகளில் (PB2 and PA) என காவப்பட்டிருந்தது

இதன் பிரதான வடிவமான எபியன் இன்ப்ளூயென்ஸா வைரஸ் (Avian Influenzavirus) H3N2 முதலில் சீன மற்றும் வியட்னாம் பன்றிகளில் இருப்பது கண்டறியப்பட்டபோது அவை இலகுவாக மனிதர்களின் காவப்படக்கூடியது என்றும் அவை காவப்படும்போது இலகுவாக மாற்றமடைந்து புதியவகைகளை தோற்றுவிக்கும் எனவும் உலக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். அவ்வாறே அது மனிதனால் H2N2 வாக காவப்பட்டு மீண்டும் பன்றிகளுக்கு தொற்றியுள்ளது 2004ம் ஆண்டு சீனாவில் பன்றிகளை சோதனையிட்டபோது H5N1 என்ற வடிவத்தில் கண்டறியப்பட்டது.

தற்போது மெக்ஸிக்கோவில் மனிதர்களை உலுக்கும் இந்தப் பன்றிக் காய்ச்சல் மெக்ஸிக்கோவின் பண்ணைகளிலிருந்து மனிதனுக்குள் புகுந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் அது எவ்வாறு மெக்ஸிக்கோவிற்கு வந்து சேர்ந்தது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை.

இந்த வைரஸின் ஆர்.ஏன்.ஏவை பரிசோதித்தபோது அதில் வட அமெரிக்கப் பன்றிகளில் காணப்படும் வைரசின் சில ரசாயனங்களும் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதியல் பொருற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவிற்கு வந்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது

தற்போது மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும இந்த வைரஸ் காய்ச்சல் பன்றியின் இறச்சியை உண்பதால் பரவாது என்பதுடன் பன்றியின் இறச்சியை 75 டிக்கிரியில் சூடாக்கினால் அந்த வைரஸ் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

இந்த நுண்ணுயிர்கள் சுவாசத்தின் மூலமாகவும் வாய், மூக்கு மற்றும் கண்களின் தொடுகையினால் பிரதானமாக பரவுவதாக ஆராச்சிகள் கூறுவதால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அனைவரும் மூக்கு வாய்களை மூடியவர்களாக காண முடிகிறது மற்றுமல்லாமல் காதலர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை நோக்கக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் பன்றியைப் சாப்பிடுவர்கள் அதிகமாக கிடையாது. என்றாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகச் சிலரும் மற்றய பகுதிகளில் நோக்கின் புற கொழும்புப் பகுதிகளிலும் நீர்கொழும்பு, ஜாஅல, கட்டுநாயக்க, களுத்துறை, மொரட்டுவ பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனக்குறைவாக இருப்பவர்களுக்கு இது உயிராபத்தை ஏற்படுத்தவல்லது.

இவ்வகை வைரசுகளை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் பல இருந்தபோதும் இதை முன்கூட்டியே தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இதை தடுத்துக் கொள்ளலாம் நோய் காணப்படுகின்ற நாடுகளில் வாழ்பவர்கள் வாய், மூக்கு பகுதிகளை மூடிக்கொள்ளுதல், குப்பைகள் சேராமல் சூழலை சுத்தமாக வைத்திருத்தல், நோயினால் பாதிக்கப்பட்டவர் இருமல் வரும் போது வாயில் துணியை வைத்து மறைத்துக் கொள்ளுதல், நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவர்கள் தங்கள் வாய், கண், மூக்குப் பகுதிகளை கையினால் தொடாதிருத்தல், கைகளை சவர்காரம் இட்டு நன்றாக்க் கழுவிக் கொள்ளுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

உலகில் தற்போதுள்ள முன்னனி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வைரசுக்கான தடுப்புசியை தாயாரிப்பதில் இரவு பகலாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

தற்போதைய உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) இன்றைய தகவலின் படி அமெரிக்காவில் 64 ஆய்வுகூடங்களினால் மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன ஆனால் இதுவரை எந்த மரணமும் சம்பவிக்கவில்லை என்பதுடன் மெக்ஸிக்கோவில் இருப்பத்தாறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. தவிரவும் கனடாவில் 06, நியூலாந்தில் 03 ஐக்கிய இராச்சியத்தில் 02 இஸ்ரேல் 02 ஸ்பெயில் 02 என இவ்வைரசால் பாதிகப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக பாதிகப்பட்ட நாடுகளின் எல்லைகளை மூடும்படியும் பிராயண தடைகளை கையாளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com