Friday, April 24, 2009

சப்மரைன் உதவியுடன் பிரபாகரன் நாட்டைவிட்டு ஓட முயற்சிப்பார். பிரிகேடியர் ஷாவேந்ர சில்வா.



வன்னியின் வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியினுள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரன் சப்மரைன் உதவியுடன் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பார் என வன்னி மீட்பு சமரின் மிகவும் முக்கிய புள்ளியாக விளங்குகின்ற பிரிகேடியர் ஷாவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

வன்னியில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிடுவதற்காக தென்பகுதியில் இருந்து சென்றுள்ள ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பிரிகேடியர், பிரபாகரன் தற்போது தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி , பொட்டு அம்மான் , சூசை ஆகியோருடனேயே தங்கியுள்ளதாகவும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது மேற்படி குழுவினருடன் நாட்டைவிட்டு வெளியேற முயர்ச்சிப்பார் எனவும், ஏனைய தளபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் அவர்கள் அனைவரும் படையினரிடம் சரணடையத் தயாரக உள்ளதாகவும் அண்மையில் படையினரிடம் சரணடைந்துள்ள புலிகளின் ஊடக இணைப்பாளரான தயாமாஸ்ரர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

நிலைமைகளை நன்கு அவதானிக்கு முகமாக புலிகளது நடமாட்டம் காணப்படுகின்ற புதுமாத்தளனை அண்டிய முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com