Friday, April 24, 2009

வெள்ளவத்தை தனியார் வங்கி ஒன்றினுள் ஆயுததாரிகள் நாடகம் ஆடினர்.

இன்று காலை வெள்ளவத்தையில் உள்ள தனியார் வங்கி ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரிகள் இருவர் அவ்வங்கியின் பாதுகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை வெளியே எடுத்துச் செல்கையில் வங்கியின் ஊழியர்களை ஆயுதமுனையில் பணயம் வைத்திருந்ததாக தெரியவருகின்றது.

வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 13 மில்லியன் பணம் எடுத்துச் செல்லப்படுவதற்காகவே அவரின் அடியாட்களான ஆயுததாரிகளால் மேற்படி நாடகம் இடம்பெற்றதாக வங்கி ஊழியர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com