புலி புல்லைத்தின்னுமா?
பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்நியத்தூதரகம் முன்பாக கடந்த வாரம் (பெப்ரவரிமாதம்) பிரான்ஸ்வாழ் புலி ஆதரவுத்தமிழர்கள் இந்திய அரசைக்கண்டித்து கோசம் எழுப்பி ஆர்பாட்டம் செய்து கண்டன அறிக்கை ஒன்றை கையளிக்க முற்பட்டுள்ளார்கள். அதிகாரிகள் அவ் அறிக்கையினை பெற்றுக்கொள்ள முன்வாராமையினால் தூதரகத்தினுள் நுழையவும், தாக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளளர்கள். இதை பொலிசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது பொலிசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அந்நேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டசிலர் தம்கையில் இருந்த குளிர்பானங்களை பொலிசாரை நோக்கி வீசியுள்ளனர். இதனால் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து ஆர்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர். இதன்போதும் கலைந்து செல்ல மறுத்தவர்களை கைது செய்துள்ளார்கள் என பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல் பிரித்தானியாவிலும் சில வாரங்களுக்கு முன்பு அத்து மீறி அரசாங்க அதிபர் மாளிகை முன்சென்று ஆர்பாட்டம் செய்த புலி ஆதாரவுத்தமிழர்கள் மீது பொலிசார் தடியடிப் பிரையோகம் மேற்கோண்டு கலைத்தனர்.
இவை போல் பல நாடுகளிலும் இவர்களால் பலசம்பவங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன.
புலிபசித்தாலும் புல்லைத்தின்னாது என்ற பழமொழியை புலிகளும், புலிஆதரவுத்தமிழர்களும் கூறுவதுண்டு இவர்கள் எந்த அடிப்படையில் அதைக் கூறுகின்றார்கள் என்றால் த.வி.புலிகள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் பயங்கரவாத, பாசிச நடவடிக்கைகளை நிறுத்தி மனிதப்பண்புடன் நடக்கமாட்டார்கள் என்பதற்காக.
ஆனால் புலி கடவாய்நக்காமல் புழுத்துச்சாவதுண்டு என்பதும் இவர்களுக்கு பொருத்தமானதே. இவ்வளவும் இருந்தும் தான் என்ற அகங்காரம் கொண்டு தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் தொடர்ந்தும் புலிகள் தவறுகள் செய்வதும் அதை ஆதரவாளர்கள் ஆதரித்து வருவதுமே ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும்.
கிழட்டுப்புலி இரைதேடத் தென்பின்றி ஏமாற்றி பிழைப்பதுபோல் தோல்வியின் விழிம்பில் நிற்கும் புலிகள் ஈழத்தமிழர்களின் மரண அவலங்களை காட்டி தப்பிப்பிழைக்கப்பார்க்கின்றார்கள். இந்த அவலங்களின் மூல காரண கர்த்தாக்களே இவர்கள் தான் என்பது தெரிந்தும் ஆதாரவுப் புலிகள் ஏற்க மறுக்கின்றார்கள். இருபைத்தாண்டுகளுக்கு மேலாக சொந்த இனந்தவர் பல ஆயிரம் பேரை புலிகள் கொலை செய்து வரும்போது ஆதரித்து அள்ளிக்கொடுத்து ஆரவாரம் செய்தவர்கள் இன்று புலித்தலைவர் வீட்டுக்கதவை மரணம் தட்டும் போது தமிழ்மக்களின் அவலங்களை விற்று அவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறர்கள். எந்த சக்தியையும் தனித்து நின்று எதிர்த்து வெல்லக்கூடிய தானைத் தலைவர்தானே எங்கள் தலைவர் என்று தம்பட்டம் அடித்த நீங்கள் இன்று ஏன் தலையிலை அடித்து ஒப்பாரிவைத்து காப்பாற்றுங்கோ என்று கத்துறியள்.
நரிகளும், கழுகுகழும் போல இலங்கைத்தமிழர் மரணத்தில் அரசியல் பிழைப்புநடத்தும் சில தமிழக அரசியல், சினிமா பிழைப்பு நடத்தும் தற்குறிகளினால் எமக்கு எதுவும் ஆகாது.
மற்றவர்களை கொலை செய்து புறந்தள்ளி உங்கள் தலைவனாலும் சரி உங்களாலும் சரி தனித்து நின்று தமிழ்மக்களை காப்பாற்ற முடியாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ளுங்கள் மாயயை கலையுங்கள் உங்களால் முடியாது என்பது உங்கள் மூலமாகவே புலப்படுகின்றது எப்படியென்றால் இப்போ உங்கள் ஊர்வலங்கள் , ஆர்பாட்டங்களில் புலிக்கொடியையும் புலித்தலைவரது படங்களையும் காணகிடைப்பதில்லை மாறாக பாரா முகமமாக இருக்கும், இலங்கை அரசுக்கு உதவிசெய்யும் வல்லரசுகள் ஆதிக்க சக்கதிகள் என்று நீங்கள் குற்றம்சாட்டும் உங்களை தடைசெய்த அமெரிக்க, ஜரோப்பிய நாட்டு தலைவர்களின் படங்களையும் தீயிலில் மாண்டு மரணத்தை மேலும் மலினப்படுத்துவர்களின் படங்கiயும் எமதுமக்களின் அவலங்களையுமே காணமுடிகிறது. இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது நீங்கள் இன்றும் தூர கண்ணோட்டத்துடன் செயற்படவில்லை. உலகநிலையை உணர்ந்து கொள்ளவில்லை, உண்மையான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை மாறாக மக்களின் உங்கள் கூட்டத்தை மட்டும்காப்பாற்றி யுத்தத்தை தொடரச்செய்து வெளிநாடுகளில் உங்கள் இருப்பை தற்காத்துகொள்ளவும் சுகமாக வாழவுமே விரும்புகின்றீர்கள்.
நாங்கள் விரும்புவதெல்லாம் எங்கள் இனம் அழிவது உடன் நிறுத்தப்படவேண்டும். முடியுமானவரை எங்கள் உரிமைகளை பெற்றக்கொண்டு மேலும் கிடைக்கவேண்டிய உரிமைகளை பெறுவதற்கு ஒற்றுமையாக சாதகமான வழிகளை கையாளவேண்டும்.
இதற்கு புலிகள் உடன் செய்யவேண்டியதும் செய்யக் கூடியதும் ஒன்றே நம்பிக்கையானவரை சாட்சியாகவைத்து ஆயுதத்தை ஒப்படைத்து அரசியல் வழிக்கு வருதல் வந்தால் மக்களின் மரணத்தை நிறுத்த முடியும் இல்லையேல் மக்களையும் அழித்து நீங்களும் அழியும் நிலையே தோன்றும் அதன் பின் எதுவும் கிடையாது கிடைத்தாலும் பலன் கிடையாது.
இருபக்கத்தாக்குதலிலும் கிக்கி சிதைந்து மரணமாகும் பாலகர்கள் பெண்கள் உட்பட அனைத்து மனிதர்களின் கோர மரணங்களையிட்டு மனம் வருந்துகின்றோம்.
நீங்களும் மனதார சிந்தியுங்கள்
புலிக்காக மட்டும் ஒப்பாரிவைக்கும் தமிழர்களே புலியை மக்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடும் படி வற்புறுத்துங்கள். இல்லையேல் நீங்கள் உங்கள் உறவுகளின் வேதனைத் தீயில் குளிர்காய்பவர்கள். நீங்களே எங்கள் இனத்தின் கொள்ளிக்கட்டைகள்.
புலிபசித்தாலும் புல்லை தின்னாது
த.வி.புலிகள் கொலைகாணாது வாழாது
புரிந்தும் புரியாது புலிகளுக்காய் புலம்புபவர் புலம்பட்டும் புலி விழுந்தால் நரிக்கு தாயம் என்பது போல் இல்லாமல் மற்றளவர்களாயினும் எம்மக்களின் அவலம் போக்க ஒற்றமையாய் செயற்படுவோம். VIII
0 comments :
Post a Comment