Showing posts with label TNA. Show all posts
Showing posts with label TNA. Show all posts

Wednesday, June 17, 2020

தமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா? மீட்பது எவ்வாறு? பீமன்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்றனர். பாராளுமன்றுக்கு தெரிவாகின்ற உறுப்பினன் ஒவ்வொருவனும் தெரிவான அதே நாளிலிருந்து பாடையில் ஏறும்வரை செல்வச்செழிப்புடன் வாழ்வதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது எனப் பூரிப்படைகின்றான்.

1978ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு அரசியல்வாதிகள் மக்களை சுரண்டுவதற்கான அத்தனை உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்புரிமைகள் என்ற போலிமுலாத்துடன், அவர்கள் நாட்டின் சட்டத்தினை மீறவும், மற்றவர்களின் உரிமைகளை பறிக்கவும், மக்களுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தினை தங்கள் பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்ளவும், இந்த அரசியல் யாப்பு வழிவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுபினரராக தெரிவு செய்யப்படும் ஒருவன், பாராளுமன்றினூடாக மக்களுக்கு என்ன சேவையை வழங்கியுள்ளான் என்ற எந்த ஆய்வும் செய்யாது, வாழ்நாள் முழுவதும் மக்கள் அவனை ஓய்வூதியம் வழங்கி பாதுகாக்கவேண்மென்ற பாரிய சுமையினை இந்த அரசியல்யாப்பு மக்கள் மீது சுமத்தியுள்ளது. நிதிநிர்வாகம் செய்வதற்கும் சட்டமியற்றுவதற்குமான பாராளுமன்று மக்களின் சொத்துக்களை தாங்கள் அனுபவிப்தற்கான சட்டங்களை இயற்றி வெகுஜன வாக்கெடுப்பின்றி அதற்கு ஆதரவாக தாங்களே வாக்களித்து மக்களுக்கு நடுவிரல்காட்டியுள்ள முக்கியமான விடயமொன்று தொடர்பில் பேசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 225 வாகனங்கள் அரசிற்கு வரிசெலுத்தாது நாட்டினுள் வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை சுமார் 700 கோடிகளை இழக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் 700 கோடிகளை ஏப்பம் விட, வரவுசெலவுத்திட்டத்தில் துண்டுவிழும் 700 கோடியை நிரப்புவதற்காக மக்கள் மீது வரிசுமை அதிகரிக்கப்படும். அதாவது நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிக்கும். நேரடியாக கூறுவதானால் சம்பந்தன், டக்ளஸ், செல்வம், சித்தார்த்தன், சிறிதரன், சிறிநேசன் என்ற சிலர் சொகுசு வாகனத்தில் பயணிப்பதற்காக சிவக்கொழுந்தும், சின்னலெப்பையும், புஞ்சிபண்டாவும் சீனிக்கும், பால்மாவுக்கும் , பனடோலுக்கும் ஒவ்வொரு ரூபாய் மேலதிகமாக செலுத்தவேண்டும்.

இந்த அவலநிலைக்கான மாற்றம் அரசியல் யாப்பினூடாக கொண்டுவரப்படுகின்றதோ இல்லையோ மக்கள் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும். இலங்கை வரலாற்றில் சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா தொடக்கம் வியாளேந்திரன் வரை பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றார்கள். இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுடன் மக்களின் வரிப்பணத்தில் சுமார் இரண்டரை லட்சம் ரூபா மாதாந்தம் வழங்கப்படுகின்றது. இதற்கு அப்பால் ஒவ்வொரு முறை பாராளுமன்று தெரிவு செய்யப்படும்போதும் சுமார் 3 கோடி ரூபா வரிச்சலுகையை பெறுகின்றார்கள். ஆனால் இவர்களை தெரிவு செய்த மக்கள் பெற்றுக்கொண்டது என்ன?P

பாராளுமன்றுக்கு தெரிவான எமது முதலைகள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாக்களை விழுங்கிவிட்டு மீண்டும்; அதே பழையே கோஷங்களுடன் அடுத்தசுற்றுக் கொள்ளைக்காக வெள்ளை வேட்டிகளுடன் மக்களின் வாசற்படி ஏறத்தொடங்கியுள்ளனர். ஆனால் மக்கள் இவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பியதனால் அடைந்தது என்ன? அவர்கள் விழுங்கியது எத்தனை கோடிகள்? என்ற கேள்விகளை கேட்க மக்கள் மறுக்கின்றனர்.

எனவே அவர்கள் விழுங்கியவற்றை மீட்கவேண்டிய காலகட்டத்திற்கு மக்கள் இப்போது வந்துள்ளனர். மக்கள் ஒன்று திரண்டால் அது செய்யமுடியாது காரியமும் அல்ல. அதனை எவ்வாறு செய்வது? ஏங்கிருந்து ஆரம்பிப்பது? ஏன்ற கேள்வி தோன்றலாம்.

கடந்த 5 பாராளுமன்றுகளை எடுத்துக்கொள்வோமானால், தமிழ் மக்கள் சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். அவர்களில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் 5 தடவைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமாக இணைந்து சுமார் 100 வரிச்சலுகை வாகனங்களை பெற்றுள்ளனர். இவற்றின் மொத்தப்பெறுமதி 300 கோடிகளாகும். ஆனால் இந்த வாகனங்களால் மக்களுக்கு கிடைத்த சேவை என்ன? எனவே அவை மீட்கப்படவேண்டும். ஆகக்குறைந்தது அவர்கள் பெற்றுக்கொண்ட வரிச்சலுகையில் மூன்றில் ஒரு பங்காவது மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அந்த வகையில் 100 கோடி ரூபா இந்த முதலைகளிடமிருந்து பறிக்கப்படவேண்டும்.

பறிக்கப்படும் பணத்தை கொண்டு உயரிய கட்டுப்பாடுகள் மற்றும் சீரான ஓழுக்கவிதிகளுடன் கூடிய தொழில் மேம்பாட்டு நிதியம் ஒன்று வடகிழக்கில் உருவாக்கப்படவேண்டும். அதனூடாக வடகிழக்கெங்கும் தொழிற்சாலைகள் , பண்ணைகள் நிறுவப்பட்டு தொழிலற்றோருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் திட்டமொன்று உடனடியாக உருவாக்கப்படவேண்டும். நிதி மற்றும் நிறுவனங்களை பராமரிப்பதற்காக உழலற்ற கட்டமைப்பொன்று உருவாக்கப்படவேண்டும். அதன் வெளிப்படைத்தன்மையை பேணும்பொருட்டும் ஆலோசனைகளைப் பெறும்பொருட்டும் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்.

இவ்வாறானதோர் திட்டத்திற்கு அடித்தளம் வடகிழக்கிலிருந்து இடப்படும்பட்சத்தில் அந்நிதியத்திற்கு தாரளமான புலம்பெயர் உறவுகள் அதன் செயற்திறனை அவதானித்து ஒரே தடவையில் உதவி புரிவர். திட்டம் செயற்படுத்தப்படின் வடகிழக்கில் வலுவான உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கமுடியும். நேரடியாக கூறப்போனால் வாழ்நாள்முழுவதும் கையேந்தி வாழப்பழகியுள்ள மக்களை உழைப்பாளிகளாக மாற்றி கௌரவானதோர் வாழ்வு வாழ வழிவிடமுடியும். இதற்கு மேலதிக நிதி தேவைப்படின் மக்களின் பணத்தை ஏப்பம் விட்டுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளின் கதவுகளையும் தட்டமுடியும்.

வாக்குகளை அபகரித்துக்கொண்டு மக்களுக்கு நடுவிரலை காட்டிவிட்டு நகர்ப்புறங்களில் சொகுசுவாகனங்களில் வாழ்ந்த அதிகார வர்க்கத்தினர் தற்போது பழைய குருடி கதவ திறடி என வேட்டி சால்வைகளுடன் மக்களின் வாசற்படிகளை மிதிக்கத்தொடங்கியுள்ளனர். எனவே இந்த ஈனப்பிறவிகளிடம் தாங்கள் பெற்றுக்கொண்ட வரிச்சலுகைப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை மேற்படி திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யுமாறு வலியுறுத்துவதற்கு தகுந்த தருணமாக நான் இத்தேர்தல் காலத்தை கண்கின்றேன்.

ஆகையால் கிராமங்கள்தோறுமிருக்கின்ற குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து சமூக சேவை செய்கின்றோம் என பணம்பெற்று முகநூலில் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்ற குழுக்கள் , தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை களைந்து மேற்படி திட்டத்திற்காக ஒன்றிணைந்து சகல அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள வரிச்சலுகைப்பணத்தில் மூன்றிலொரு பகுதியை பெற்றுக்கொள்வதற்கு அணிதிரளவேண்டும். இவ்விடயத்தில் மக்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தி , மக்கள் புரட்சி உருவாக வேண்டும். அவ்வாறு பணத்தினை தரமறுப்பவர்கள் அம்பலப்படுத்தப்படுவதுடன், புதிய வேட்பாளர்களாக வந்திருக்கின்றவர்களுடன் , அவர்கள் வெல்லும் பட்சத்தில் வாகனவரிச்சலுகையினை பெறுவார்களாயின் மூன்றிலொன்றை மக்களின் தொழில் மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்குவோமென்ற ஒப்பந்தத்தை செய்துகொள்ள முன்னவருகின்றவர்களை இத்தேர்தலில் வெற்றிபெறவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இத்திட்டம் இன்றியமையாதது என்று நினைக்கின்றவர்கள் இதனை வாசித்ததுடன் நின்றுவிடாது இம்முன்மொழிவை மக்களுக்கு கொண்டு செல்வதுடன் இது தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு இக்கட்டுரையை தங்கள் சமூகவலைப்பின்னல்களில் பகிர்ந்து விவாதங்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகின்றேன். நன்றி.

வரிச்சலுகை பெற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களதும் அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை வாகனங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற அண்ணளவான பட்டியலை இணைக்கின்றேன். இதை பகிர்ந்துதவுங்கள்..




Read more...

Monday, March 9, 2020

புலிகள் வன்முறையை கையிலெடுத்ததால் இருந்ததையும் இழந்தோம்.. அடித்துக் கூறுகின்றார் த.தே.கூ மட்டு வேட்பாளர் நளினி

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பெண்ணொருவர் களமிறக்கப்படுகின்றார் என்றும், மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சுமந்திரனின் தனிச் செல்வாக்கினால் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்ற விமர்சனங்கள் நிலவி வருகின்றது.

இந்நிலையில், நளினி எனப்படும் குறித்த பெண் இன்று மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகள் வன்முறையை கையிலெடுத்ததனால் தமிழ் மக்கள் இருந்ததையும் இழந்து நிற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

புலிகளியக்தை மிக மோசமாக விமர்சித்துவந்துள்ளீர்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், புலிகள் மாத்திரம் அல்ல சகல இயக்கங்களுமே வன்முறையை கையிலெடுத்திருந்தது என்று ஆணித்தரமாக கூறினார்.

இவ்விடத்தில் புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றும் புலிகளை விமர்சிப்போர் தங்களது ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்தர்ரவர்களா என்ற கேள்விகளை குறித்த பத்திரிகையாளரிடம் இலங்கைநெட் முன்வைக்கின்றது.

அத்துடன் தமிழ் இயக்கங்கள் யாவும் வன்செயலை கையிலெடுத்திருந்தவர்களென்றும், அவர்களால் தமிழ் மக்கள் இருந்தவற்றையும் இழந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கும் நளினி தனது வலது மற்றும் இடது கரங்களில் யாரை கோர்த்துக்கொண்டு தேர்தலில் குதிக்கின்றார் என்பதை மறந்துவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக ரெலோ மற்றும் புளொட் இயக்கத்தை வைத்துக்கொண்டு அவர்கள் வன்செயலாளர்கள் என்று கூறுகின்றார். மறுபுறத்தில் தான் வன்செயலுக்கு எதிரானவள் என்று கூறுகின்றார். அவ்வாறாயின் வன்செயலாளர்கள் உள்ள கூட்டமைப்பில் தங்களுக்கு சீட்டு கிடைக்குமாயின் , அவர்கள் வன்செயலாளர்கள் இல்லையா என்ற கேள்வியையும் இலங்கைநெட் எழுப்புகின்றது.
...............................

Read more...

Saturday, January 25, 2020

நெதர்லாந்து உதவி திட்டத்தில் தரகு பணம் பெற்ற ராஜித மற்றும் சத்தியலிங்கம்!!

வவுனியா வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற நெதர்லாந்து உதவி திட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்களும் தரகு பணம் பெற்றமை தற்பொழுது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக மேலும்தெரியவருவதாவது

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி உதவியை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைக்கான ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் அண்மையில் வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தின மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நெதர்லாந்து நிதி உதவி திட்டம் தொடர்பாக நாம் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன அதவாது இவ் நெதர்லாந்து உதவி திட்டத்தின் மூலம் 15 வீதத்திற்கும் மேற்பட்ட தரகு பணம் சத்தியலிங்கத்திற்கும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்களுக்கும் பரிமாறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோல் தரம் குறைந்த மருத்துவ உபகரணங்களை வடக்கு
மாகாணத்திற்கு வழங்கிவிட்டு அவ் உபகரணங்கள் தரமான கொள்வனவு போல் காட்டி நிதி மோசடிகளில் இவ் இருவரும் ஈடுபட்டிருந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் சத்தியலிங்கம் அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபொழுது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கென கொள்வனவு செய்யப்பட்ட இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றிருந்தது. இவ் ஊழல் மோசடி தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் சத்தியலிங்கத்தை பதவி நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த முனைந்தபோது சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு சத்தியலிங்கம் அவர்கள் மீது விசாரணை நடத்தவேண்டாம் அவர் இராஜினாமா செய்வார் என கூறியதை அடுத்து அவ் விசாரணை அறிக்கை முழுமையடைவதற்கு முன் கிடப்பில்போடப்பட்டது.

மேலும் இவ் இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவிற்காக ஆஸ்ரேலியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட நிதியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருந்தது. இதனால் தரம் குறைந்த இயந்திரம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் இவ் இயந்திரம் தரமானதா இல்லையா என்பதை உயிர் மருத்துவ பொறியியலாளர்கள் (Bio Medical Engineer’s) மூலம் தர நிர்ணயம் செய்து உன்மை நிலையை அறிந்து கொள்ளமுடியும் என வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அண்மைக் காலங்களில் வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு செய்த சிறுநீரக நோயாளர்கள் உட்பட பலர் குறுகிய காலத்தில் இறப்பதாகவும் இதன் மூலம் இவ் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் தரம் குறைந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் சத்தியலிங்கத்திற்கும் ராஜிதசேனாரத்தினவுக்கும் உள்ள நல்லுறை பயன்படுத்தி அரசாங்கமானது இலங்கையில் நடந்த இன அழிப்பின் உண்மை தன்மையை உலகிற்கு மறைத்துள்ள செயற்பாடும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சத்தியலிங்கம் அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது வடக்கு மாகாண ரீதியில் குடும்பநல உத்தியோகத்தர்களை கொண்டு யுத்தகாலத்தில் இடம்பெற்ற இழப்புகளை திரட்டும் பணி நடைபெற்றது. இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தகவல் திரட்டும் போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அதாவது யுத்தகாலத்தில் இறந்தவர்கள்
காயப்பட்வர்கள்; சொத்தழிவுகள் விசேடதேவைக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை என்பன அரசாங்கம் கூறியதை விட இரண்டு மடங்காக காணப்பட்டுள்ளது இதை சத்தியலிங்கம் அவர்கள் ராஜித அவர்களுக்கு தெரிவித்த பொழுது அரசாங்கத்திற்கு இவ் விடயம் பாரிய சவாலாக இருக்கப்போகின்றது என கருதிய ராஜித தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அப்போதைய வடமாகாண சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கத்தை கொண்டு அவ் செயற்திட்டத்தை நிறுத்தியுள்ளார். இதற்காக இருவருக்கும் இடையில் பல பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக நம்பதகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாழும் தமிழ் மக்கள் சொல்லனாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்நிலையில் உயிரைபாதுகாக்கும் இவ் மருத்துவ துறையில் மலிந்து காணப்படும் ஊழலை செய்யும் இவ்வாறன ஊழல் பேர்வழிகளை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற மக்கள் முன்வரவேண்டும் என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேற்படி செய்தியானது கடந்த செப்டம்பர் மாதம் இணையத்தளம் ஒன்றில் பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரையின் உண்மைத்தன்மை தொடர்பில் இலங்கைநெட் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் செய்திக்கான எந்த பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றது.

நாட்டு மக்கள் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்;வதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை எவ்வித தணிக்கை அல்லது மாற்றம் செய்யாது இலங்கைநெட் மறுபிரசுரம் செய்கின்றது.

தேர்தலொன்றை மக்கள் எதிர்கொள்ளவுள்ள நிலையில் கடந்த காலங்களில் எமது அரசியல்வாதிகளின் மோசடிகள் தொடர்பாக வெளிவந்திருந்த செய்திகள் யாவற்றையும் மக்களின் ஞாபகமூட்டலுக்காக மீள்பிரசுரம் செய்யவுள்ளோம்..


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com