Tuesday, August 11, 2020

அமீரகத்திலிருந்து இலங்கை வந்துள்ள நால்வருக்குக் கொரோனா தொற்று!

ஐக்கிய அராபி அமீரகத்திலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள நால்வருக்கு கொவிட் - 19 தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த நால்வரோடு இலங்கையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2875 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட 29 பேர் இன்று பூரண சுகமடைந்து தத்தம் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தற்போது 2622 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 242 நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com