Tuesday, August 4, 2020

தேர்தல் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அதிகாரிகள் 69,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்!

பொதுத்தேர்தல் பணிகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய இதுதொடர்பில் குறிப்பிடும்போது, தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏதுவான நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

நடமாடும் பொலிஸ் சேவை 3,069 செயற்படுத்தப்படவுள்ளதாகவும் உதவிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் தவிர, சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com