Saturday, July 11, 2020

கொரோனாவின் இரண்டாவது அலைபற்றி நாங்கள் ஏற்கனவே சொன்னோம்.. கேட்டால்தானே! - ஹரித்த அலுத்கே

நாங்கள் கொரோனாவின் இரண்டாவது அலை பற்றி நாங்கள் ஏற்கனவே சொன்னோம். கொரோனா தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கினோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

கந்தக்காடு விடயத்தில் கொரோனா பெரிதாக எழுந்துள்ளதாகக் குறிப்பிடும் அவர், தற்போது உத்தியோகபூர்வமாக 250 பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உத்தியோகப்பற்றற்ற அறிவித்தல்களின்படி 300 பேருக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். அந்த்த் தொகை வெகுவிரைவில் அதிகரிக்க்க்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது அலைபற்றி தற்போது சரியாகச் சொல்லவியலாது எனவும், அது சமூகமயப்படுத்தலை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com