Saturday, July 11, 2020

ஹபராதுவையில் முழுக்குடும்பமும் கொரோணா தொற்றுக்கு!. அயலவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில்..

ஹபராதுவையைச் சேர்ந்த ஒருவர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றது.

குறித்த நபர் கந்தக்காடு சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் வளவாளராக்க் கடமையாற்றிய ஒருவராவார். அவரது தாயார் மற்றும் மனைவி சகிதம் வீட்டிலுள்ள அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மனைவி ஒரு ஆசிரியையாவார். அவர் கடமையாற்றிய பாடசாலையின் மாணவர்கள் 25 பேரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவர்கள் தொடர்புவைத்திருந்த அவர்களது வீட்டை அண்மித்த வீடுகளும் பலவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com