Monday, July 20, 2020

கொழும்புத் துறைமுகத்தின் ஒருபகுதி இந்தியாவுக்கு?

அரசாங்கத்தினால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட கைச்சாத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை இந்தியாவிற்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறிந்துகொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்குள்ளதால், குறித்த உடன்படிக்கையை வெ ளிக்கொணர்கின்றோம். குறித்த உடன்படிக்கையின் மூலம் துறைமுகப் பகுதி இந்தியாவுக்கு வழங்குவதற்கான இணைப்பு ஏற்பட்டுள்ளதால், இனி அதற்கேற்றாற் போல செயற்பட வேண்டும் என அரச தரப்பினருக்கு எண்ணப்பாடு தோன்றியுள்ள போதும், ஒப்பந்த்த்தில் அவ்வாறான நிதிஒதுக்கீடு இல்லை எனவும் குறித்த இணையத்தளத்தின் சட்டவியல் ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்க காலத்தில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த்த்திற்கேற்ப கடைசி சட்டவியல் ஒப்பந்தம் செய்யமுடியாமற் போனமைக்கான காரணம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அதற்கு எதிர்ப்புக் காண்பித்தமையேயாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com