Thursday, July 16, 2020

எதிர்வரும் நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என்கிறார் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா!

எதிர்வரும் சில நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என, கொரோனா ஒழிப்புப் பிரிவின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார்.

பொதுமக்கள் இதுதொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நோயின்றி இருத்தல் ஒவ்வொருவரினதும் கடமை எனவும் தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மார்ச் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்பட்ட தியாகங்களே 30 ஆம் திகதி கடைசி கொரோனா தொற்றாளரும் சுகமடையக் காரணமாக அமைந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com