Thursday, July 16, 2020

சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கடத்தும் புதியமுறை இதோ!

வெலிக்கடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக வீசப்பட்டிருந்த 18 பார்சல்களில் இருந்த ஹெரோயினுக்குள்ளிருந்து இன்னும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவின் மதிலுக்கு மேலாக இந்தப் பார்சல்கள் வீசப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். குறித்த பார்சல்களில் கைத்தொலைபேசிகள் 38, கையடக்கத் தொலைபேசிகளின் பெட்டரிகள் 264, 20 சிம் காடுகள், 3.5 கிராம் ஹெரோயின், 10 மாவா பக்கட்டுக்கள், 40 புகையிலைகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொரல்ல பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொரல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 7 இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு்ள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com