Sunday, July 26, 2020

தேர்தலுக்கு முன்னர் என்னைக் கொலை செய்ய எத்தனித்துள்ளார்கள்...! அழுது புலம்புகிறார் ஜகத் புஷ்பகுமார

ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னர் தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட வேட்பாளர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆலோசனை செய்த இடம்பற்றிக் கூட தனக்குத் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்த அவர், இலங்கை சுதந்திரக் கட்சிக்காக தான் மிகவும் அர்ப்பணிப்புடன் அரசியல் செய்ததாக வெல்லவாயில் இடம்பெற்ற அரசியல் மேடையொன்றில் அழுத வண்ணம் குறிப்பிட்டார்.

அண்மையி்ல் வெல்லவாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவருக்கெதிராக பெரும்பான்மையினர் செயற்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com