Saturday, June 6, 2020

பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை நாளை!

சுகாதார வழிகாட்டுதல்களின்படி பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான ஒத்திகையை நடாத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நாளை நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார். சுமார் 200 வாக்காளர்களைப் பயன்படுத்தி ஒத்திகை தேர்தல் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சமீபத்தில் தேர்தல் நடாத்துவதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தார்.

தேர்தல் ஒத்திகைத் திட்டம் இந்த வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டே நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com