Monday, June 29, 2020

நீண்ட இடைவௌிக்குப் பின்னர் இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்!

மூன்று மாதங்களுக்குப் பின்னர் பாடசாலை இன்று திறக்கப்படுகின்றது. இன்று ஆசிரியர்களும் கல்வி சாரா ஊழியர்களும் மட்டுமே பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு, அவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வண்ணம் நேரசூசியை தயாரித்து ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அனைத்து மாகாணங்களினதும் செயலாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுத்தல்கள் அடங்கிய கோவையொன்றை அனுப்பிவைத்துள்ளாார்.

நேரசூசிகைகள் தயாரிக்கப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் குறித்த பாடவேளைகு 30 நிமிடங்கட்கு முன்னர் வருகை தரவியலும் எனவும், ஆசிரியர்கள் விடுகை எடுப்பதாயின் வேறு ஒருவரை நியமித்தல் மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com