Saturday, June 27, 2020

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பான விசேட சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அரச நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் அரச ஊழியர்களின் ஆடைகள், பணிக்கு செல்லும் நேரம் ஆகிய விடயங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று நேரத்திற்கு கடமைக்கு சமூமளிக்க வேண்டும். உரிய ஆடைகளை அணிய வேண்டும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com