Wednesday, June 24, 2020

ரணிலும் சஜித்தும் விமலுக்கு பேரிடியாம்... பொதுமக்களே என் தலைவலியை நீக்குங்கள்! - அழுகின்றார் விமல் வீரவங்ச

தனக்கு அரசியல் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாக குறைபட்டுக்கொள்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச.

பொதுத் தேர்தலுக்கான கூட்டமொன்றின்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளதாகவும். அவர்கள் அவர்கள் இருவரைவிடவும் இருமடங்கு விருப்பு வாக்குகளைப் பெறும் ஆசை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்ற அவர், தனது தலையிடியை தன்னால் மட்டும் நீக்கிக் கொள்ளவியலாது எனவும். அதற்குப் பொதுமக்களின் ஒத்தாசை தனக்குக் கிடைக்க வேண்டியுள்ளது எனவும் தனக்குக் கிடைக்கும் வெற்றி முழு நாட்டுக்கும் கிடைக்கும் வெற்றியே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com