Monday, May 25, 2020

ஜனநாயகத்தில் பொதுமக்கள்.... கொரோனாவுக்கோ பின்னடைவு!

தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகிறது.

இருப்பினும், உச்சநீதிமன்ற மனுக்களின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்தபடி சமூக இடைவெளி, கைகளைக்கழுவுதல் மற்றும் முகமூடிகளைப் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் மீண்டும் கலந்துரையாடித் தேர்தலை நடாத்துவது எனவும், ஏற்கனவே ஐந்து சுற்றுக் கலந்துரையாடல்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு சாலை வரைபடத்தைத் தயாரித்து, அதனைப் பொதுத் தேர்தலுக்கான ஆணைக்குழுவின்முன் சமர்ப்பிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com