Saturday, May 30, 2020

குருதி போதியளவு இல்லை : கொடையாளர்கள் முன்வாருங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அழைப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக இரத்த வங்கிக்கு தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை. இது தவிர வழமையாக நடைபெறுகின்ற இரத்ததான முகாம்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.

ஆகவே குருதிக் கொடையாளர்கள் வைத்தியசாலை இரத்த வங்கியை தொடர்பு கொண்டு குருதிக்கொடை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
அனைத்து வகையான குருதிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் 0212223063 0772105375 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு குருதிகளை வழங்க முடியும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com