Saturday, May 16, 2020

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் தற்போது இல்லை : ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

இலங்கையில் கொவிட் -19 தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் தற்போது இல்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்றை தடுப்பதில் சர்வதேச ரீதியில் பெற்ற இந்த வெற்றியை தொடர்ந்து நாம் தக்கவைத்துக்கொள்வது எமது கடமையாகும். எனவே எதிர்வரும் காலங்களில் நாட்டு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு - 12 பண்டாரநாயக்க மாவத்தை வாழைத்தோட்டம் மற்றும் ஜா-எல, சுதுவெல்ல ஆகிய பகுதிகள் நேற்றுக் காலை முதல் திறக்கப்பட்டதாக தெரிவித்த அவர் அதற்கமைய, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனை கிடைக்கும் வரை சுய தனிமை செயற்பாட்டை தொடர்ந்தும் பேணுமாறு இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com