Friday, May 1, 2020

கைதிகளை தங்கவைக்க மாந்தீவு வைத்தியசாலையை கோரும் அதிகாரிகள்!

மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள மாந்தீவு வைத்தியசாலையை சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதற்கான கோரிக்கைக் கடிதத்தையும் சிறைச்சாலைத் திணைக்களம் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த வைத்தியசாலையை இன்று வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு செயலாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்தார்.

புதிதாக சிறைவரும் கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் 14 நாட்கள் பூசா, நீர்கொழும்பு. பல்லன்சேன மற்றும் போகம்பர ஆகிய சிறைச்சாலைகள் வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் கொரோனா வைரஸ் சிறைச்சாலைக்குள்ளும் பரவும் என்பதால் புதிதாக வரும் கைதிகளை மாந்தீவு வைத்தியசாலையில் தங்கவைப்பதற்கான யோசனை சமர்பிக்கப்பட்டிருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com