Thursday, April 2, 2020

முஸ்லிம்களின் சடலங்களைப் புதைப்பதற்கு தனியான இடம் வேண்டும்! ஜம்இய்யத்துல் உலமா சபை

ஆட்கொல்லி நோயான கொரோனா தொற்றின் மூலம் மரணமடையும் முஸ்லிம்களின் சடலங்களைப் புதைப்பதற்கு அரசாங்கம் தனியான காணியொன்றை ஒதுக்க வேண்டும் என ஜம்இய்யத்துல் உலமா சபை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின், அரச அதிகாரிகளின் ஆலோசனையின்படி முஸ்லிம்களின் சடலங்களைப் புதைப்பதற்கு அரசாங்கம் தனியான காணியொன்றை வழங்க வேண்டும் எனவும், அண்மையில் கொரோனா வைரசுத் தொற்றினால் காலஞ்சென்ற முஸ்லிம் நபரின் சடலம் எந்தவித அறிவித்தலுமின்றி எரிக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அதிருப்திக் குள்ளாகியுள்ளனர் எனவும் ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.எல்.எம். இல்யாஸ் அறிக்கையொன்றின் மூலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com