Wednesday, April 8, 2020

கடலில் சிக்கித்தவித்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு உதவிய இலங்கை கடற்படை!

இலங்கை கடற்பிரதேசத்தில் பயணித்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமான படகில் சிக்கித்தவித்த வெளிநாட்டு தம்பதிக்கு இன்று புதன்கிழமை இலங்கை கடற்படை உதவியளித்துள்ளது.

கொரோனா வைரஸினால் நாட்டிற்குள் எந்த வெளிநாட்டுப் படகையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவு காணப்படுகிறது. இதனால் இலங்கை கடற்பரப்பின் காலிப் பிரதேசத்தில் பயணித்த இந்த வெளிநாட்டுப் படகிற்கு அருகில் சென்ற கடற்படை படகைத் திருத்திக் கொடுத்த அதேவேளை, அவர்களுக்கான உணவுப் பொருட்களையும் வழங்கியிருக்கிறது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com