Saturday, April 18, 2020

அடுத்த வாரம் வௌிவரவுள்ளது அரச நிறுவனங்களை ஆரம்பிப்பது தொடர்பிலான சுற்றுநிரூபம்!

அரசாங்க நிறுவனங்களில் கடமையாற்றுவது தொடர்பில் விசேட சுற்றுநிரூபம் ஒன்று அடுத்த வாரம் வௌிவரவுள்ளது என அரசா நிருவாக சுதேச அலுவல்கள் மற்றும் மாகாண நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து, நாட்டின் தற்போதைய நிலை பற்றி கலந்துறவாடி, தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளதாகவும் அரச நிருவாக சுதேச அலுவல்கள் மற்றும் மாகாண நிருவாக அமைச்சு குறிப்பிடுகின்றது. மேலும், அரச நிறுவனங்களில் மீண்டும் பணிபுரிவது எவ்வாறு என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com