Thursday, April 2, 2020

கொரானோவைப் பரப்பும் மதபோதகர்கள்...! ஹட்டனில் 800 பேர் தனிமைப்படுத்தலில்!

ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் மூன்று தோட்டங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் நேற்று (01) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்விடயம் தொடர்பிலான கவிதை

மதபோதகன் என்ற பேரில்
காம லீலைகள்
நாளுக்கு நாள்
அரங்கேறுகின்றன...
ஏமாறுபவர்கள் அதிகமாய் உள்ளதால்
ஏமாற்றும் காம தேவன்கள்
உலாவருகின்றனர்
கூடவே பிசாசுக் கூத்துடன்
கொரானாவையும் சுமந்து...
கட்டிப்பிடித்து
முத்தம் கொடுக்க
பாவங்கள் படையெடுத்தோடும்
கர்த்தர் ஆசிர்வதிப்பார்
என்றெல்லாம் சொல்லி
ஓரிரு புல்லுருவிகள்
நடிக்கிறார்கள்
கொரோன ஆட்கொல்லிகளாய்...

கேலிக் கூத்தினால்
ஒன்று பலவாக
பல கொரோனாக் குழந்தைகள்
பிரசவிக்கப்படுகின்றன
பலரைத் தனிமைப்படுத்த...
பலரைச் சுட்டுச்சாம்பராக்க....

புகழ்விரும்பா மதபோதகர்கள்
அட்டகாசமின்றி
அமைதியாக
பள்ளிகளில் ....

அவர்களையும்
விஞ்சியோராய்த் தன்னைக்காட்டி
நோட்டுக்கள் குவிக்கின்றனர்
இந்த நாதாரிகள்...

பாவப்பட்டோருக்காய்
சிலுவை சுமந்த இயேசு
இவர்களின் பாவங்களையும்
சுமந்துதான் நிற்கிறாரோ?

இயேசு பாவங்களை மன்னிப்பார்
என்றெண்ணித்தானோ
காற்றுப்புகா வண்ணம்
கட்டியணைக்கின்றனர்
பிசாசுகளை விரட்ட....

-----

இறைவா...!
இன்னுமே கொரானோ என்றால்
ஏதென்று தெரியாமல்
கண்மூடித்தனமாய்
கண்ணாம்பூச்சி பிடிப்போருக்கு
மெய்யறிவினைப் புகட்டு...

தள்ளிநிற்காவிட்டால்
சமுதாயம் மட்டுமல்ல
உலகே தள்ளிவைக்கும்
கொள்ளி வைக்கும் என்பதை
அவர்கள் உள்ளங்களில்
போட்டுவிடு...!

-மதுராப்புர, கலைமகன் பைரூஸ்
2020.04.01

(குறிப்பு - இது மதத்தைப் புண்படுத்தும் பதிவன்று. மதத்தின் பேரால் சல்லாபிப்பவர்களுக்கானது.)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com