Sunday, March 8, 2020

„புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" இதற்காக புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை இதோ! பீமன்

இலங்கையில் 2009 ம் ஆண்டு புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மொழியில் „தோற்கடிக்கப்பட்டனர்' புலிகளின் மொழியில் „ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது'. எதுவாக இருந்தாலும் மக்களுக்கு எஞ்சியது இழப்புக்களும் , அவலங்களும் , வறுமையுமேயாயினும் „ எது நடந்ததோ அது நன்றாகவே நடத்தது' என்று வன்னியிலுள்ள மக்களில் பெரும்பாண்மையினர் கூறுகின்றனர்.

இன்று எமக்கு உண்ண உணவில்லையாயினும் அச்சமற்ற உறக்கமுண்டு என்றும் உழைந்தால் உயரலாம் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் புலம்பெயர் தமிழர் அல்லது புலிகளிடமிருந்து அபிவிருந்திக்கான உதவியை வேண்டுகின்றனர். அவர்கள் வேண்டும் உதவியானது கோழிக்குஞ்சியை கொடுத்துவிட்டு படம்பிடித்து பத்திரிகையில்போடும் உதவியல்ல. ஒரு தொழில்புரட்சிக்கான அடித்தளத்தை நாடி நிற்கின்றனர்.

ஆனால் புலம்பெயர் புலிகள் அந்தமக்களுக்கு கிடைக்கபெற்றிருக்கின்ற அச்சமற்ற சுவாசத்தை அசுத்தப்படுத்துவதற்காக இராப்பகலாக உழைக்கின்றனர். அதற்காக அவர்கள் வகுத்துள்ள வியூகத்தில் ஒருபகுதி இலங்கைநெட் ன் காதுக்கு எட்டியது. அதை உங்கள் காதில் போடவேண்டியது எங்கள் கடமை, அதை கிரகித்துக்கொள்வது உங்கள் திறமை.

2009 புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அணுகுமுறைகளில் அபாரா மாற்றங்கள் ஏற்பட்டது. அது முடிந்தால் பண்ணிப்பாரும் என்று சாவால்விடுக்கும் மாற்றம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாட்டில் எமது இறையாண்மையை நாங்கள் காத்துக்கொள்வோம் என்று மார்தட்டி நின்றனர் ராஜபக்சங்கள். 5 வருடங்களில் அவர்களை மேற்குலகு இந்தியா இணைந்து தூக்கி எறிந்தது. அத்துடன் தங்களுக்கு தேவையானவாறு சீனாவின் உள்நுழையும் வேகத்தை ஓரளவுக்கு தணித்துக்கொண்டனர். அதற்கு சமாந்தரமாக அல்லது நிகராக தங்களின ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள வழிசமைத்துக்கொண்டனர்.

இந்நிலையில், பௌத்த ராச்சியம் என்று எழுதப்படாத கோட்பாட்டினை பெரும்பாண்மை சிங்கள மக்களிடம் முன்வைத்து மேற்குலகினாலும் இந்தியாவினாலும் இலங்கையில் நிறுவப்பட்ட ஆட்சியை தகர்த்தெறிந்த ராஜபக்சங்கள் ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றினர்.

இதையடுத்து இந்தியா பத்திப்பதறி இலங்கையை அழைந்தது, அன்பாக அழைந்தது. ஆனால் பழையகுருடி கதவை திறடிதான். ஏங்கள் முடிவுதான் அமெரிக்காவின் முடிவு என்றது. அமெரிக்காவின் முடிவு என்றவுடன் ராஜபக்சக்கள் ஆடவேண்டிய விடயங்கள் பலவுடண்டு அதற்குள் செல்லவில்லை. ஆனால் 13 ற்குள் சென்றார்கள்;. பொதுத்தேர்தல் முடிந்தவுடன் பேசலாம் என்று இலங்கை ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் 13 பலப்படுத்தி தனது காலை ஆழமாக ஊன்றுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது தகவல்.

13 ஐ இலங்கையில் பலப்படுத்துவதென்பது பலரின் அரசியல் இருப்புக்கு கொள்ளிவைக்கும் செயலாகும். இந்த கொள்ளிவைப்புக்கு இம்முறை இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ளப்போகின்றது. இலங்கை அரசு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை மேசைக்கு அழைத்து நியாயமானதும் நிதானமானதுமான மாற்றங்களை 13 ல் மேற்கொண்டு சேர்க்கவேண்டியவற்றை சேர்த்து கழிக்கவேண்டியவற்றை கழித்து ஒரு விளையாட்டு காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை எவ்வாறாயினும் இலங்கை அரசு முறியடிக்க திட்டம் போட்டேயாகும். அவ்வாறாயின் அதனை எவ்வாறு முறியடிப்பது. „கோடாரிக்காம்பு' விளையாட்டுத்தான். 13 ஐ கொண்டுவந்தபோது பிறேமதாஸ புலிகளை கோடாரிக்காம்பாக்கினார். புலிகள் இது எங்களுக்கான தீர்வில்லை. இந்தியனே வெளியேறு என்று. பிறேமதாஸவிடம் ஆயுதத்தை வாங்கி அடித்து வெளியேற்றினர். மாபெரும் வெற்றி. புpராந்திய வல்லரசை அடித்து வெளியேற்றிய (காதிதப்) புலிகள்.

ஆனால் இம்முறை ஆயுதத்தால் அடிக்கமுடியாது, அதற்காக புலம்பெயர் புலிகள் நாட்டில் தங்களது கோடாரிக்காம்புகளை செம்மையாக சீவிக்கொண்டிருக்கின்றனர். அது எவ்வாறு? முதலாவது இலங்கை பாராளுமன்றுக்கு விக்கினேஸ்வரன் , கஜேந்திரகுமார் பொன்னைஅம்பலம் ஆகியோரை அனுப்பி 13 தீர்வாகாது என்று அதை குழப்பியடிப்பதுதான் திட்டம்.

இத்திட்டத்திற்காக புலம்பெயர் புலிகள் தமது முழுப்பலத்தையும் பிரயோகிக்கின்றனர். தமது பொம்மைகளை பாராளுமன்றுக்கு அனுப்பி, தீர்வு விடயங்களில் அவர்களை கலந்துகொள்ளை வைப்பதாகும். அவ்வாறு விக்கினேஸ்வரன் பொன்னைஅம்பலம் ஆகியோர் தமக்கு வழங்கப்பட்டுள்ள வைக்கோற்பட்டறை நாய்களுக்கான பாத்திரத்தை கச்சிதமாக வகிப்பர் என்பது திண்ணம்.

இது தான் „புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்'

எனவே இத்தாகத்தை தீர்க்க அளிப்பீர் வாக்கு விக்கினேஸ்வரனுக்கும் , பொன்னையம்பலத்துக்கும்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com