Friday, March 20, 2020

மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தில் விமானப்படை முகாம்!

மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தின் பாதுகாப்புக் கருதி, அமைச்சரவை 200 ஏக்கர் நிலப்பகுதியுன் கூடிய பகுதியை விமானப்படைக்கு வழங்குவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளது.

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ளதையடுத்து, விமானப் படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் சரிவர நிறைவேற்றுவதற்காகவே விமானப்படை முகாம் ஒன்றை மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தில் ஸ்தாபிப்பதற்குத் தீர்மானித்தாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்களும் மத்தளை விமான நிலையத்திற்கும் வழங்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com