Tuesday, March 17, 2020

ஆபத்தை நோக்கி இலங்கை – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரசின் காரணமாக இலங்கை ஆபத்தை நோக்கிச் செல்கிறது. பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 43ஐ எட்டியுள்ளதாக தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன்று மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம், ஒரு நாளில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகிய நாள் இன்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com