Thursday, February 27, 2020

சப்ரா சரவணபவனின் சகா கிராம சேவகரின் Ruberstam ஐ களவாக வெட்ட முற்பட்டு கையும் களவுமாக மாட்டு..

வட-புலத்து உழைப்பாளிகளின் அத்தனை உழைப்பையும் ஆட்டையைபோட்ட பகல்கொள்ளைக்காரான் சரவணபவனின் பிரத்தியேக செயலாளர் யாழ் மாவட்டத்திலுள்ள கிராம சேவகர் ஒருவரின் இறப்பர் முத்திரையை களவாக செய்துகொள்ள முற்பட்டு கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

சுழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவகரான திருமுருகவேல் என்பவரே இவ்வாறு பிடிபட்டுள்ளார். ஒய்வு பெற்றதை தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் செயலாளராக செயற்பட்டுவரும் இவர் மாதகல் கிராம சேவகரின் இறப்பர் முத்திரையை களவாக செய்துகொள்ள முற்பட்டபோது மாட்டிக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது யாதெனில், குறித்த இரப்பர் முத்திரையை பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் யாழ் மருதா இறப்பர் முத்திரை நிறுவனத்தில் செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது, அங்கு தொழில்புரியும் தொழிலாளி ஒருவருக்கு மாதகல் கிராசேவகருக்கு பிரத்தியேகமாக பரிட்சயமானவராகையால், உடனடியாக அவர் கிராமசேவகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இத்துடன் கிராமசேவகரின் பெயரால் மேற்கொள்ளப்படவிருந்த மோசடி தடுக்கப்பட்டுள்ளதுடன், இம்மோசடி முயற்சி தொடர்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. மோசடி முயற்சி தொடர்பாக இன்று பிரதேச செயலகத்தில் விசாரணைகள் இடம்பெற்றதாகவும், விசாரணைக் குழுவினரிடம் தனது சகா மீதான விசாரணையை நிறுத்துமாறு சப்ரா சரவணபவன் அழுத்தம் கொடுத்ததாக அறியமுடிகின்றது.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச செயலரை தொடர்பு கொள்ள இலங்கைநெற் முயற்சி செய்தபோதும், அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com