Tuesday, February 18, 2020

கிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை வழங்கிவருவதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குற்றச் சாட்டியுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்த அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில் கடந்த தேர்தலின்போது ராஜபக்சர்களை முடித்துக்கட்ட சூழ்ச்சிகளை மேற்கொண்ட குழு இன்று பின்கதவால் சென்று பதிவிகளை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலின்போது இதயசுத்தியுடன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதுடன் எதிரிகளை இணைத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு ஆளுநரின் செயற்பாடுகளால் தங்களால் தொடர்ந்தும் அரசியல் மேற்கொள்ள முடியாததோர் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com