Wednesday, February 12, 2020

உயித்த ஞாயிறுத் தாக்குதலை தந்தை எவ்வாறு முன்கூட்டியே அறிந்திருந்தார்? கேள்விக்கணைகள் மகனிடம்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றி தனது தந்தை தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார் என ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பிரனாந்து கூறியிருந்தமை அறிந்ததே.

தற்போது அதுதொடர்பில் கருத்துப் பதிவிற்காக பா.உ ஹரீன் பிரனாந்து நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெறவுள்ளது என தனது தந்தை சொன்னதனாலேயே தான் ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறியிருந்தமை தொடர்பில் கருத்தினை ஆராய்வதற்காகவே ஹரீன் பிரனாந்து அழைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்று மணித்தியாலங்கள் அவரிடம் இதுதொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com