Wednesday, January 1, 2020

இரு வங்கிகளை மூடிச்செல்ல முனைகின்றனர். வைப்பிலிடுவோர் அவதானம்.. !

'எக்ஸிஸ் பேங்க் லிமிடட்' மற்றும் 'ICICI பேங்க் லிமிடட்' ஆகிய வங்கிகள் இலங்கையில் மேற்கொண்டுவருகின்ற வியாபார நடவடிக்கைகளை நிறுவத்துவதற்கு, அவ் வங்கிகளின் தலைமை நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில் குறித்த வங்கி நடவடிக்கைகளை முடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, தற்போது இந்த வங்கிககளில் பொதுமக்கள் வைப்பிலிடுவது உள்ளிட்ட வங்கி வியாபாரத்தில் ஈடுபடுதல் போன்ற நடிவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை என மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

இந்த வங்கிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரம், இந்நாட்டில் அவ்வவ் வங்கி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதும் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com