Wednesday, January 22, 2020

யாழ் பல்கலைகழக மாணவி இராணுவச் சிப்பாயால் கழுத்தறுத்து கொலை

காதலியான யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவியை கழுத்தறுத்து கொலை செய்தார் காதலனான கிளிநொச்சி பரந்தன்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த படைச்சிப்பாய்.

இச் சம்பவம் இன்று நண்பகல் யாழ் பண்ணை கடற்கரையில்

இடம்பெற்றுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ளதாகவும் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.அந்த நபரை பொலிஸார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com