Tuesday, January 21, 2020

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறிய கதை - நீதிபதியிடம் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபாலவிடம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக நீதிபதி தம்மிகா ஹேமபாலகொழும்பு குற்றவியல் பிரிவில் இன்று (21)முன்னிலையாகியுள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாடியமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு சட்டமா அதிபர் கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நீதிபதி கிஹான் பிலபிட்டிய மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க ஆகியோரிடம் கொழும்பு குற்றவியல் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com