Thursday, January 16, 2020

துணை மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகள் நால்வருக்கு 22 திகதி தூக்குத்தண்டனை

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துவிட்டது.நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு டிசம்பா் 16 ஆம் திகதி அன்று நள்ளிரவில் ஓடும் பேருந்தில் நிா்பயா என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து வீதியில் தூக்கி வீசப்பட்டாா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிா்பயா சிங்கப்பூா் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ராம் சிங் என்பவா் டெல்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறுவர் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில் வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் நீதிபதி சதீஷ் குமாா் அரோரா, இந்த வழக்கின் குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகிய நால்வருக்கும் திகாா் சிறையில் ஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, நால்வரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதேநேரம் குற்றவாளிகளில் இரண்டு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தள்ளுபடி செய்துவிட்டது.குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், குற்றவாளிகளுக்கு கடைசி மற்றும் இறுதி சட்ட நிவாரணம் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் கருணை மனு செய்தார். இதனை டெல்லி அரசு நிராகரித்துள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com