Wednesday, January 1, 2020

வடக்கிலுள்ள 120 தமிழ் பொலிஸாரை இடமாற்ற அதிரடி நடவடிக்கை! நீலிக்கண்ணீர் வடிக்கும் வல்லூறுகள்

இடமாற்றம் பெற்றுச்செல்லும் வடமாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வடமாகாணத்தில் கடமையாற்றும் 120 பொலிஸாரை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இவ்வுத்தரவானது அவரது அதிகார எல்லகை;குட்பட்ட விடயமாகும்.

இவ்வாறானதோர் அதிரடி உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வடமாகாணத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகித்தர்கள் பல்வேறு வகையான குற்றச்செயல்களுடன் தொடர்புடையயோருடன் தொடர்புகளை பேணிவருவதுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருவதாக மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரமே மேற்படி முடிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் வந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இவ்வுத்தியோகித்தர்கள் பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு துணைபுரிவதுடன் விசாரணைகளின்போது பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் அதற்காக லஞ்சம் பெறுவதாகவும் மக்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர். அத்துடன் குற்றவாளிகளை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றபோது உள்ளிருந்த தகவல் வழங்குதல்போன்ற இரட்டைச் செயற்பாடுகளையும் இவர்கள் மேற்கொண்டுவருவதாக சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இலங்கைநெட்டிடம் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் குறித்த இடமாற்றம் தொடர்பாக கருத்துகேட்டபோது, தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர்கள் தொடர்பில் அவர்கள் சார்பான எவ்வித அபிப்பிராயத்தையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதுடன் அவர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர் என்ற கருத்தே கிடைக்கப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாயினும் மேற்படி இடமாற்றத்திற்கு எதிராக அவர்கள் பல்வேறு தரப்புக்களிடம் முறையிட்டுள்ளனர். அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகள் தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர்கள் சிலரின் இடமாற்றத்தை ரத்துச் செய்வதற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி இடமாற்றத்தை இனரீதியான பாகுபாடாக காட்ட சிலர் முற்பட்டு வருகின்றமை கண்டனத்திற்குரியதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com