Thursday, December 26, 2019

ஆவாக்குழுவை நாங்கள்தான் இயக்குகின்றோம். லண்டனிலிருந்து புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பேற்றுள்ளது.

வடபுலத்தில் கடந்த சுமார் ஐந்தாண்டுகாலமாக ஆவா என்ற பெயர்கொண்ட குழுவொன்று செயற்பட்டுவருவதும் இதன் பின்னணிகள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வந்தமையும் யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் குறித்த ஆவா குழுவினை தாமே இயக்கி வருதாக புலிகளின் புலனாய்வுத்துறை லண்டனிலிருந்து பொறுப்பேற்றுள்ளது.

புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகவிருந்து கருணாவினால் கொல்லப்பட்ட நீலன் எனப்படும் ஆரையம்பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி சோமநாதனின் பெயரில் லண்டனில் நீலன் அறக்கட்டளை என்ற அமைப்பை இயக்கிவரும், புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அமுதன் என்பவராலேயே இந்த பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடிவரும் பாயிஸ் எனப்படும் றிசார்ட் பதுயுத்தீனின் நெருங்கிய சகாவிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும்போதே அமுதன் புலிகளின் புலனாய்வுத்துறைதான் ஆவா குழுவை இயக்கிவருகின்றது என்ற உண்மையை வெளியிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக செயற்பட்டுவரும் இளைஞனுக்கு அமுதன் உயிரச்சுறுத்தல் விடுவதையும் புலிகளின் புலனாய்வுத்துறையே ஆவா குழுவை இயக்கி வருகின்றோம் என்பதையும் கீழுள்ள ஒலிப்பதிவில் கேட்கலாம்.



இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புலம்பெயர் தேசங்களில் சேகரிக்கப்படும் பணம் எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதற்கு மேற்படி ஒலிப்பதிவு சிறந்த சாட்சியமாக அமைந்துள்ளது. மக்களின் வாழ்வினை மேம்படுத்துவற்கு என அறவிடப்படும் பணம் அதே மக்களை அவலத்தினுள் தள்ளுவதற்கும் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதற்கும் பறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கே அமுதன் என்பவனால் குறிப்பிடப்படும் முல்லை ஈசன் என்பவர் மீதான தாக்குதலும் இவ்வாறானதே. முல்லை ஈசன் என்பவர் முகநூலில் சமூகச்சீர்கேடுகள் தொடர்பாக பதிவுகளை இட்டுவந்தபோது, அவ்வாறான சீர்கேடுகளை தாங்களே உருவாக்கியுள்ளதாகவும் அதற்கு எதிராக பதிவிடுவதை நிறுத்தவேண்டும் எனவும் அமுதனால் முல்லை ஈசன் என்பவர் எச்சரிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்தும் முல்லை ஈசன் சீர்கேடுகளுக்கு எதிரான பதிவுகளையிட்டுவந்த நிலையில் இரவு 10.30 மணியளவில் அவரின் கடையினுள் புகுந்த காடையர்கள் மண்டையை உடைத்து பலத்த காயப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறாயின் தமிழ் மக்களின் விடுதலைக்காக புலிகள் போராடினார்கள் என்பதை தொடர்ந்தும் மக்கள் நம்பவேண்டுமா என்ற கேள்வியை இவ்விடத்தில் இலங்கைநெட் முன்வைக்கின்றது.

கிளிநொச்சியில் மக்களின் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் மோசடிக்காரன் ஒருவனுக்கெதிராகவும் அந்த மோசடிக்காரனுக்கு ஒத்தாசையாக செயற்படும் பொலிஸ் உப பரிசோதகருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என புலிகளின் புலனாய்வுத்துறை சமூக நலன்விருப்பி ஒருவரை எச்சரிக்கின்றதென்றால் புலிகளின் நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களை ஒரு பாதுகாப்பற்ற சூறையாடப்படும் சூழலில் வைத்துக்கொள்வதே புலிகளின் வியூகமாக அமைந்துள்ளது என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். புலிகளுக்கும் சமூகவிரோதிகளுக்குமிடையேன உறவு ஆராயப்படவேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் வாழ்வினை சீர்குலைத்து சுயலாமடைய நோக்கம் புலிகள் மற்றும் புலிசார் அமைப்புக்களுக்கு தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர் உதவி புரியத்தான் போகின்றார்களா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

மேலும் புலிகள் தங்களை ஒரு ஒழுக்கமான அமைப்பு எனக்காட்டிக்கொண்டிருந்தனர் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அமுதன் நிறைமதுபோதையில் இங்கே பயன்படுத்தும் வார்த்தை பிரயோகங்கள் அவ்வமைப்பின் ஒழுக்கம் தொடர்பான தெளிவானதோர் விளக்கத்தை கொடுத்துள்ளது.

அச்சுறுத்தலக்குள்ளாகியுள்ள இளைஞனின் செயற்பாடு அதன் பின்னணி தொடர்பான செய்தியை வாசிக்க கீழேயுள்ள இணைப்பில் அழுத்தவும்.

அநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com