Tuesday, December 3, 2019

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் வெளிநாடு செல்லத்தடை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்று கூறப்படும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு பெண் ஊழியருக்கு, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு, இம்மாதம் 9ஆம் திகதி வரை தடை விதித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், 9ஆம் திகதிக்கு முன்னர், சி.ஐ.டியினருக்கு வாக்குமூலத்தை அளிக்குமாறும், நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்தவாரம் சுவிஸ் தூதரக பெண் ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு மணித்தியாலயங்களின் விடுவிக்கப்பட்டிருந்தார். சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கையின் குற்றபுலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சுவிஸ் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார் என்ற வகையில் அச்சுறுத்தும் நோக்கில் குறித்த சுவிஸ்தூதரக பெண் கடத்தப்படடிருக்கலாம் என பலரும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com