Wednesday, December 4, 2019

இனி பொதுஜன முன்னணி கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடும்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கட்சிகளும் இனி கதிரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

கோட்டையில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் பொதுத்தேர்தலில் விரிவான ஒரு கூட்டணியாக நின்று போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிலான நிபந்தனை அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எனக்கூறுபவர்கள் இந்த ஒப்பந்தம் பற்றிச் சரியாகத் தெரியாதவர்களே... வேறு தனிப்பட்ட ஆசைகளுடன் இருப்பவர்களே எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பல்வேறு தகவல்களை வெளியிடுவதை நிறுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையினால் ஒப்பந்தத்தின் உடன்பாடு பற்றி தகவல் வெளியிடப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com