Wednesday, December 4, 2019

இன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...! சஜித்

தோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார் எனத் தெரியவருகின்றது.

அவர் பெரும்பாலும் பதுளை மாவட்டத்தைத் தேர்ந்தெடுப்பார் என அவருடன் தொடர்புடைய நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பதுளை மாவட்டத்தின்ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஹரின் பிரனாந்து பொதுத்தேர்தலில் அம்மாவட்டத்தைக் கைவிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. அவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவராகவுள்ள ஜோன் அமரதுங்க அரசியலிலிருந்து ஒதுங்கவுள்ளதனால், ஹரீன் பிரனாந்து கம்பஹா மாவட்டத்திலிருந்து போட்டியிடத் தயாராகவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com