Tuesday, December 17, 2019

ஆட்சிபீடமேறி ஒரு மாதம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் அரசு இரட்டை வேடம் போடுகிறதாம்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு மாதம் ஆகின்றபோது, அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பிரதான ஆயுதமாகக் கொண்டிருந்த தேசிய பாதுகாப்பு மற்றும் MCC உடன்படிக்கை தொடர்பில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மறுதளிக்கப்பட்டு அரசாங்கம் இரட்டை வேடம் பூண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவிக்கிறார்.

நேற்று மதியம் ம.வி.மு தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் இறையாண்மையை அமெரிக்காவுக்குத் தாரைவார்க்கும் MCC உடன்படிக்கைகயை சாக்கடையில் வீசியெறிவதாக ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளித்தவர்கள் தற்போது இந்த உடன்படிக்கையை ஆராயவுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த உடன்படிக்கைகயை குப்பைத் தொட்டியில் வீசுவதாக கூறியிருப்பது எதுவிதமான ஆராய்ச்சியும் இன்றியே என்பது தற்போது தெளிவாகிறது.

விஜித ஹேரத் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும்போது.....

கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றதன் பின்னர் அரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றைக்கு ஒரு மாதமாகிறது. ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் தேசிய பாதுகப்புக்கு அச்சுறத்தலை ஏற்படுத்திய ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் அமெரிக்க மிலேனியம் சேலஞ் கோப்பரேஷன் (MCC) உடனபடிக்கை.

குறிப்பாக மிலேனியம் சேலன்ஞ் கோபரேஷன் உடன்படிக்கைகயை குப்பை தொட்டியில் வீசியெறிய உள்ளதாகவே அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதிகளாக வழங்கினர். அது மட்டுமல்ல இந்த உடன்படிக்கையில் கைசாத்திட்டால் இலங்கையின் காணி உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுமெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இன்று மிலேனியம் சேலன்ஞ் கோபரேஷன் 70% நல்லதென கூறுகின்றனர். முற்றாக குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிவதாக கூறிய உடன்படிக்கை எப்படி 70% நல்லதாக முடியும் என நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம். அவ்வாறு கூறுவதற்கான அளவீடு என்ன? அதில் அடங்கியுள்ள நல்லவைகள் என்ன? அதை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ரணில்-மைத்திரி அரசாங்கம் இந்த உடன்படிக்கையை கைசாத்திடுவதற்காக அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றிருந்தனர். அப்போது நாங்கள் அவர்களுக்கு தெரிவித்திருந்தோம். இந்த உடன்படிக்கை மட்டுமல்ல 1995 இல் கைசாத்திடப்பட்ட சோபா உடன்படிக்கையும், 2007 மார்ச் 05 ஆம் திகதி அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷாவும் அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளேக் ஆகியோரால் கைசாத்திடப்பட்ட எக்ஸா உடன்படிக்கையையும் நமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பாரிய அச்சுறுத்தல் என்பதை தெரிவித்திருந்தோம்.

தற்போது கைசாத்திடுவதற்கு தயாராகும் மிலேனியம் சேலன்ஞ் கோபரேஷன் நிறுவனத்தின் பிரதானி சோன் கெயான் குரோஸ் நேரடியாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவராவார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்தியேக ஆலோசனைக் குழுவின் உறுப்பினறுமாவார். அவருக்கு புறம்பாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரும் இதில் உள்ளடங்கியிருக்கிறார். அதற்குப் புறம்பாக மேலும் மூவரைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது அபப்டியானால் இது எப்படி சுயாதீனமான நிறுவனமாகும்.

மிலேனிய சேலன்ஞ் நிதியுதவியை இந்நாட்டுக்கு வழங்குவதற்கு 18 அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்பதான இந்த 480 டொலர் மில்லியன் கடன் வழங்கப்படுகிறது. உண்மையில் இந்த நிதியின் மூலமாக ஏகாதிபத்தியவாதிகள் தமது மறைமுக குறிக்கோளை அடைவதற்கு எதிர்பார்க்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

ஆசியாவில் சீனாவுடன் அமெரிக்காவுக்கு இருக்கின்ற போட்டி பொருளாதார மற்றும் யுத்த ரீதியாக இரண்டு பக்கத்தில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆசியப் பிராந்தியத்தில் நேரடியாக தலையிடுவதற்காக இவ்வாறான உடன்படிக்கைகளை பயன்டுத்தி வருகின்றனர். அதனால் அரசியல் ரீதியாக இது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய உடன்படிக்கையாகும்.

ஆனால் அமைச்சரவை கடந்த வாரம் முடிவுசெய்திருப்பதாவது மிலேனியம் சவால் கோபரேஷன் நிறுவனத்தைப் பற்றி கலாநிதி லலித சிரி குணருவன் அவர்களின் தலைமையில் துணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

அதேபோன்று இந்த உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோது சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தாவது, இதுபற்றி ஆய்வுசெய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாக தெரிவித்தது. தேர்தல் காலத்தில் சாக்கடையில் எறிவதாக கூறிய இந்த உடன்படிக்கை 70% நல்லதென கூறுவது வீதி புனரமைப்பு தொடர்பிலான நிபந்தனையாகும். ஆனால் இதற்கேற்ப நமது நாட்டின் வீதி சமிஞ்சைகள் தொடர்பிலான சகல தகவல்களும் அமெரிக்காவுக்கு செல்கிறது. மறுபுறத்தில் காணி தொடர்பிலான விடயங்கள் அனைத்தும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்துவவனாகவே அமைந்திருக்கிறது.

அன்று வாக்குகளைப் பெறுவதற்காக கெட்டதென கூறிய ஒப்பந்தத்தை இன்று அந்த பணத்தை பெறுவதற்காக நல்லதென கூறுகின்றனர். இதனால் மகா போதியும் எமக்கு இல்லாது போய்விடுமெனக் கூறியவர்கள் இன்று தமது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளனர். கம்மன்பில, டலஸ் அலகபெரும போன்றவர்கள் நடவடிக்கை இதற்கு சான்றாகும்.

நிலம் என்பது விற்பனை பண்டமல்ல. அது நமது நாட்டு மக்களின் மரபுரிமையாகும். அடுத்த தலைமுறையினருக்கு பெற்றுக்கொடுக்கின்ற ஒன்றாகும். ஆனால் 70% நல்லதென கூறுகின்றவற்றில் நமது நாட்டில் நிலத்தின் உரித்துரிமை, மக்களுக்கு இல்லாது செய்கின்ற ஆபத்து தோன்றியுள்ளது. அதேபோன்று அரசியல் ரீதியாக தேசிய பாதுகாப்புக்கு தேசத்தின் இறையாண்மைக்கு பாரிய தீங்கு ஏறபடப்போவது தவிர்க்க முடியாது.
அதனால் இதை இனியும் பரீசீலிக்க வேண்டிய விடயமல்ல. அதனால் தேர்தல் மேடைகளில் கூறியதுபோன்று உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இப்போது அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை காட்டி வருகிறது. ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் இப்படியென்றால் எதிர்காலம் இதைவிட மோசமானதாகவே அமையும் என்பதை கூறி வைக்க விரும்புகின்றோம்.

அரசாங்கம் இது தொடர்பில் தமது தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அமெரிக்கவுக்கு அது தொடாபில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அமைச்சரவையில் கலந்துரையாடுவது, துணைக்குழுவை அமைப்பது போன்ற விடயங்களால் மக்களை ஏமாற்றாது, தேர்தல் மேடைகளில் தெரிவித்த நிலைப்பாட்டில் இருக்கிறிர்களா? அல்லது நிராகரிக்கின்றிர்களா என்பதை அமெரிக்கவுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் எமக்குத் தெரிந்தவரையில் தேர்தல் வாக்குறுதிகளை சாக்கடையில் எறிந்துவிட்டு 8640 கோடி ரூபாவை பெறுவதற்காக அனைத்தையும் தாரைவார்ப்பதற்காக அரசாங்கம் வாயை பிளந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆகவே ஒரு மாதம் செல்வதற்கு முன்னர் நிர்வாணமான அரசாங்கம். பச்சோந்தியான அரசாங்கம்.

நாங்கள் கூறுவதாவது பணத்திற்காக இரட்டை வேடம் போடுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மிலேனியம் சவால் மட்டுமல்ல, எக்ஸா, சோபா போன்ற உடன்படிக்கைகளிலிருந்தும் விலக வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com