Thursday, December 5, 2019

அநுராதபுரம் சிறையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டகளப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தண்டனை பெற்றவர்கள் என்பதோடு, தண்டனைக் காலம் நிறைவுறும் முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்ட்டவர்கள் அனைவரும் தங்களின் மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் தினமும் கையெழுத்து இடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி ஏழு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு இதுவரை இவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலையும் விடுவிக்க என்பதோடு, ஆரவாரமின்றி விடுதலை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com