Tuesday, December 17, 2019

முரளி ஏற்க மறுத்த வடக்கு மாகாண ஆளுநர் பதவி சார்ள்ஸுக்கா?

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை, இலங்கையின் முன்னாள் கிரிக்கட்ட வீரர் முத்தையா முரளிதரன் நிராகரித்துள்ளார்.

அவரிடம் இதுதொடர்பில் கேட்டபோது, அந்தப் பதவிக்குத் தான் விருப்பமில்லை எனக்கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெறாமைக்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என சூட்சுமமாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாண ஆளுநராக சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பி.எஸ்.எம் சார்ள்ஸை நியமிப்பதற்கான திட்டம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திருமதி சார்ள்ஸிடம் இலங்கைநெட் கேட்டபோது அவ்வாறான எவ்வித திட்டமும் இல்லை என அவர் கூறினார்.

1 comments :

Anonymous ,  December 17, 2019 at 9:46 AM  

இவருக்கு (முரளிதரன்) தமிழ் எழுத படிக்க தெரியாது. இவர் பெயர் மட்டும்தான் தமிழ்.

He does not know how to write Tamil. His name is only Tamil.

VSMjondal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com