Friday, December 13, 2019

ஐதேகவின் மறுசீரமைப்பு தொடர்பில் தனிப்பட்ட கருத்துக்களை வழங்கிய இருவருக்கும் உள்ளிடத்து அதிருப்தி!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் திட்டங்களை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களான, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தலதா அத்துகோரல இருவரும் நேற்று நடாத்திய ஊடகச் சந்திப்பு குறித்து குழுவின் மற்ற உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன மற்றும் பேராசிரியர் அசு மாரசிங்க ஆகியோரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சபையின் இரு உறுப்பினர்களும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பின்னர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டமை குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மீறுவதாகவும், கட்சி மறுசீரமைப்பு திட்டத்தை சீர்குலைப்பதாகவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com