Sunday, December 15, 2019

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைச் சிக்கவைக்க முனைகிறது புலிப்பினாமிகள் அமைப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க எல்.ரீ.ரீ.ஈ சார்பு புலிப்பினாமிகள் அமைப்புகள் சில திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புலம்பெயர் அமைப்புகள் ஐரோப்பாவின் பல நகரங்களில் சந்தித்து கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.

அருட்டந்தை எமானுவேல் தலைமையிலான உலகளாவிய தமிழ் அமைப்பு இந்த செயல்முறைக்கு தலைமை தாங்குகிறது என்று இராஜதந்திர அறிக்கைகள் கூறுகின்றன.

பல சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த செயல்முறையை ஆதரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com