Sunday, December 15, 2019

ஜனாதிபதியினால் சரியான விடயங்களைச் செய்யவியலுமா? தனக்குச் சந்தேகம் என்கிறார் அர்ஜுன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சரியான விடயங்களைச் செய்யவியலுமா? என்று எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது எனவும், அவரைச் சூழவுள்ளோர் பழையவர்கள் என்றும் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

பா.உ. ரணதுங்கா வாரபலனா ஸ்ரீ ஜினேந்திரராம கோவிலுக்குச் சென்று அங்குள்ள குறைபாடுகளை ஆராயச் சென்றபோது, ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. தேர்தல் தொகுதியொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மஹர தொகுதியை மீளக் கட்டியெழுப்புமாறு என்னிடம் கோரியுள்ளார். நான் எந்தத் தொகுதியை எடுக்கின்றேனோ அத்தொகுதியில் பணியாற்றுவேன். தொகுதிகளுக்குச் சென்று ஐக்கிய தேசியக் கட்சியை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயலாற்றுவேன்.நாட்டுக்குப் பொருத்தமானவற்றைச் செய்வேன்... புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவேன்.' எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com