Friday, December 6, 2019

பிரிகேடியர் பிரயங்க பெர்ணாண்டோ குற்றவாளி என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது பிரித்தானிய நீதிமன்று..

புலம்பெயர் தமிழர்களை கழுத்து அறுப்பதாக சைகை மூலம் எச்சரிக்கை விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ பொதுச் சட்டத்தை மீறிய குற்றவாளியாக பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.

பொதுச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நிலையில், அவருக்கு பிரிட்டன் உச்சநீதிமன்றம் 2400 பவுண்கள் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.

இலங்கையின் ராஜதந்திரியும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிமான பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விசேட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இலங்கையின் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் புலம்பெயர் தமிழர்கள் கணடனப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை பார்த்து உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பதவி நிலை அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தை அறுப்பது போல் சைகையை காண்பித்திருந்தார்.

இந்த செயல் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களிலும், சமூகவலைத் தளங்களிலும் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரிகேடியரின் இந்த செய்கையால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்த போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவோ அவரது சார்பில் சட்டத்தரணிகளோ முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த பிடியாணை இலங்கை அரசின் கடும் அழுத்தங்கள் மற்றும் இராஜதந்திர முயற்சியினால் பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையீட்டின் பின்னர் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் இந்த செயல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர பணிக்கு உட்பட்டது அல்ல என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம்; தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொதுச் சட்டத்தை மீறிய குற்றத்தில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நிலையில், அவருக்கு பிரிட்டன் உச்சநீதிமன்றம் 2400 பவுண்கள் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com