Monday, December 2, 2019

புலம்பெயர்ந்தோர் வாக்களிக்ககூடியவாறு சட்டதிருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றார் மஹிந்த.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தபால்மூலம் வாக்களிப்பை மேற்கொள்ளும் முறையைத் தயாரிக்க 2025 ற்குள் கட்டாயமாக சட்டத்தை உருவாக்கு வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தெரண தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் கருத்து மேலும் கருத்து தெரிவிக்கையில்:
2020 மார்ச் மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதாயின் ஏப்ரல் 25ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அது தொடர்பான இறுதி முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தான் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும் அதன் உறுப்பினராக தொடர்ச்சியாக கடமைபுரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர் அதிகரித்த சிக்கல் தன்மையை தீர்ப்பதற்காக கட்டுப்பணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான சட்டமூல வரைவு தயாரித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com